Wednesday, January 23, 2008

செல்போன் மூலம் காசு சுட்ட வழிகள்

இப்ப யாழ்ப்பாணத்தில செல்போன் signal கிடைச்சா சாமி வரம் தந்தமாதிரி... முந்தி 2002 இல ஒரு உடன்படிக்கை அந்த இழவின்ர பெயரெல்லாம் மறந்து போச்சு. பாதையும் திறந்தார்கள். கலர் கலரா வெளிநாட்டுக்காரரும் வந்திச்சினம். கூடவே cellphone, computer, digital camera, video camera என்று பலவும் வந்தது.
cellphone ஐ வைச்சிட்டு நாங்கள் பண்ணிண கூத்திருக்கே...

Physics சோதி சேர் I.Q method என்று சிலநேரங்களில இருக்கிறதையும் குழப்பிவிடுவார்.இந்த பொடியங்களுக்கு ஒரு பழக்கம்,
உடனே கலர் காட்ட வெளிக்கிடுவாங்கள்.. அவர் எழுதினதுக்கு கீழ்
'மேலதிக விளக்கங்களுக்கு நாடவேண்டிய தொலைபேசி இலக்கம்'
என்று பக்கத்தில உள்ளவனின்ர ரெலிபோன் நம்பரை கரும்பலகையில் எழுதி விடுவார்கள்., இப்பிடித்தான் என்ர சோதரம் பக்கத்தில உள்ளவனின்ர(மோகன்) ரெலிபோன் நம்பரை கரும்பலகையில் எழுதினான். அண்டைக்கே மோகன்
''மவனே உனக்குவைக்கிறன்டா ஆப்பு '' என்று சபதம் எடுத்தான்.
மோகன் சொல்லிறதை செய்யிற பேர் வழி .

அதனால என்ர சோதரம் கவனமா இருக்க வேண்டும் என்று யாராவது ரெலிபோன் நம்பரைக் கேட்டால் இ.மி.ச , இ.போ.ச நம்பரைக் குடுத்திட்டு வருவான். நாய்க்கு மூக்கில வேர்த்த மாதிரி மோகனும் நம்பரைக் கண்டுபிடித்தான், கண்டுபிடித்தவன் சும்மா இருப்பானா.
"யோ"(பல பேற்ற கனவுக்கன்னி அவளின் ரெலிபோன் நம்பர் ஒரு பரமரகசியம்) அவளின் ரெலிபோன் நம்பரேண்டு சத்தியிடம் சோதரத்தின் ரெலிபோன் நம்பரைக் கொடுத்து பழி தீர்த்திட்டான்.
இது தெரியாம சோதரம் பெருமையா 'என்னை யாரென்று எண்ணி நீ பார்க்கிறாய்' என்ற லெவல் பாட்டு வேற.

இரவு 11 மணிக்கு இரண்டு பேரும் மேசையில் நல்ல நித்திரை (A/Lல் பழகிய நல்ல பழக்கமொன்று. என்யினியராய் வரோனும் படி படி என்று A/L படிக்கும் போதே என்யினியரிங் படிக்கிறது மாதிரி பெருமைப்படுகின்ற பெற்றோர்க்காக குறைந்தது 5மணித்தியாலம் படிக்க?????? எடுத்தமுயற்சி அது சொதப்பி குறட்டை விட்டு தூங்கிற அளவுக்கு வந்த சோகங்கதை )

message torn ..
சட்டு புட்டுண்டு இரண்டு பேரும் எழும்பிட்டம். சோதரம் போன எடுத்து பார்த்தான்(அது அவனுடைய தொலைபேசி)
.
ஒரு புன்னகை ''ஆயிரம் பரா லைட் அடிச்சமாதிரி ''.
ஓடிப்போய் dressing tableக்கு முன்னால நிண்டு வடிவாய் பார்த்தான்.

திரும்பவும் ஒரு message torn ..ஒரு புன்னகை. என்னப் பார்த்து இழக்காரமா ஒரு சிரிப்பு வேற..

'' என்னஇழவு நடக்குதுடா'' என்று கேட்க பாய்ஞ்சுவிழுந்து ஒவ்வொரு மெசேஜ்ஜாக் காட்டினான்.

''hi chellam நித்திரையோ?''

''நீ ரொம்ப வடிவு உன்னைக்காண தினமும் ரியூசன் வாசலில் காத்திருத்திருக்கிறேன்.தினமும் உன் வாங்கிலுக்கு நேராய் இருக்கதுடிக்கிறேன்''

சோதரத்திற்கு பயங்கர சொக் "பெட்டையலும் இப்படிச்செய்வாளலோ??" என கேட்க
''ஆனாலும் உன்னப்பார்த்து இதெல்லாம் ஓவர்" என ..நான் வாய்மூட..

அடுத்த message torn
"ஏய் 'யோ' ஏன்டா பதில காணேலை."


இப்பதான் இரண்டுபேருக்கும் விசயமே புரிந்தது .சோதரம் tension ஆயிட்டான்..
இரண்டுபேரும் என்னடா பண்ணலாமெண்டு மூளையைப்போட்டு அடிச்சம்.

மீள message torn....
"if u dont reply me, I'll suicide"
என்று ஒராள் மாடியிலை இருந்துகுதிக்கிற மாதிரி படமும் ஒன்று.

இரவு 12 மணி: இண்டைக்கு ஒரு முடிவுகாண்றது தான்...என்று
ஒரு sms அனுப்பினம்

"hi i wanna talk to u, but i dont have enough credit in my phone now, If u have a KIT card I can talk to u now. Send me a top up card number"

உடனே 100ரூபா பெறுமதியான இரண்டு top up card number கூடவே ஒரு நன்றியும் வந்தது.

ரெலிபோன் அதிகம் பாவிக்கிறமெண்டு போன்ல 5 ரூபா மீதியோட இனிமே
kit card ற்கு காசில்லை என்று அம்மா பேசின கடுப்பில இருந்த எங்களுக்கு பேய்ச் சந்தோசம்.

''உங்கள் கணக்கு மீதி 205 ரூபா'' என்ற அழகான பெண்குரலோட
தொலைபேசிக்கு ஒரு மூடு விழா. 4 நாளால திரும்பவும் திறப்பு விழா செய்திட்டு ரியூசனிற்கு போயிட்டம்.

காசத்தந்தவன் காத்திருந்து அடிச்சான்.
அம்மா போன எடுத்து நான் ''முரளின்ட அம்மாகதைக்கிறேன்'' என சோதரத்தின்ர பெயரை உளறிட்டா.

சத்திக்கு தலையில் மிளகாய் அரைச்சது யாரென்று விளங்கிவிட்டது ஆனாலும் பாவம் என்ன செய்வான்
காசை திருப்பிக்கேட்டால் குட்ட உடைச்சிடுவோம் என்ற பயத்திலை கப்புசிப்பு ன்னு இருக்கின்றான்.
இப்படி எக்கச்செக்கம்.(நிறைய) இருக்கு
இ.மி.ச: இலங்கை மின்சார சபை
இ.போ.ச : இலங்கை போக்குவரத்துச்சபை

3 comments:

Anonymous said...

iyoH

ரசிகன் said...

:)))))))))

Anonymous said...

naddu nalla munari irruku! ;0)